search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்"

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என அனைத்து எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி உள்ளனர். #Parliamentelection
    புதுடெல்லி:

    தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு பதிலாக வாக்குச்சீட்டு முறையை பின்பற்றுமாறு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறை பின்பற்ற வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.



    நேற்று முன்தினம் கூட அந்த கட்சியின் தலைவரான மம்தா பானர்ஜி, டெல்லியில் பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து இது தொடர்பாக ஆதரவை திரட்டினார். அதன் தொடர்ச்சியாக இந்த விவகாரம் தொடர்பாக அடுத்த வாரம் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த 17 எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன.

    இது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான டெரக் ஓபிரையன் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘வருகிற பாராளுமன்ற தேர்தலில் வாக்குச்சீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இது தொடர்பாக அடுத்த வாரம் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்த உள்ளோம். மேலும் தேர்தல் கமிஷனிலும் கோரிக்கை வைக்க இருக்கிறோம்’ என்று கூறினார்.

    வாக்குச்சீட்டு முறைக்கு ஆதரவளிக்குமாறு பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனாவிடமும் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்தார். அந்த கட்சியின் தலைவரான உத்தவ் தாக்கரேயும் வாக்குச்சீட்டு முறைக்கு ஏற்கனவே கோரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.  #Parliamentelection
    அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தை அணுக 17 கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #ParlimentElection2019 #BallotPaper
    புதுடெல்லி:

    இந்தியாவில் கடந்த சில தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் காகித பயன்பாடு குறைவதாகவும், பல ஆயிரம் கோடி ரூபாய் மிச்சப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

    இதற்கிடையே, கடந்த பாராளுமன்ற தேர்தல் உள்பட சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்கள் வரை நடைபெற்ற மின்னணு வாக்குப்பதிவு முறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக காங்கிரஸ், திரிணாமுல், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.



    இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தை அணுக 17 கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #ParlimentElection2019 #BallotPaper
    ×